ரஜினி, கமல் போன்றவர்கள் முதல்வர் பதவிக்காக அரசியலுக்கு வருகிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை காமராஜர் சாலையில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு இளைஞர் அணி சார்பில் வேல் பரிசளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், “இளைஞர்களுக்கு எல்லாம் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் அப்துல் கலாம். ஆனால் அவருக்கு முன்னாலேயே இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது அ.தி.மு.க.. அதற்கு நானே சாட்சி. சாதாரண ஏழை குடும்பத்தில் எனக்கு இவ்வளவு தூரம் பதவி அளித்தது இந்த கட்சிதான்.
திரையுலகில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும் பணத்தை வாங்கி கொண்டு கொள்கையை விட்டு கொடுக்காமல் 138 திரை படங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். பணத்திற்காக சிகரெட் பிடிப்பது போல, மது அருந்துவது போல பெண்களை மானபங்கபடுத்துவது போல எம்.ஜி.ஆர் நடிக்காதவர்” என்றார்.
மேலும், “இன்றைய நடிகர்கள் பணத்திற்காக இளைஞர்களை சீரழிக்கும் வேடங்களில் நடிக்கிறார்கள். ரஜினி, கமல் போன்றவர்கள் முதல்வர் பதவிக்காக அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் முதல்வர் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தவர். எனவே அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் பெரிய பதவிக்கு வரலாம். அதற்கு முதல்வர், துணை முதல்வரே சாட்சி” என்று பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!