நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் கூட மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்படும். கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்களை ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்க வந்தபோது, நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்தை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனிடையே அடுத்தாண்டு முதல் தமிழக மாணர்கள் சிரமமின்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்