நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் கூட மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்படும். கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்களை ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்க வந்தபோது, நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்தை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனிடையே அடுத்தாண்டு முதல் தமிழக மாணர்கள் சிரமமின்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!