கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே எலவடை கிராமத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார். கருவில் இருக்கும் சிசுக்களை கண்டறிந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுதொடர்பாக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். சித்தூரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பெண் சிசுக்களை கருக்கலைப்பு செய்வதாக அறியப்பட்டு வருகிறது என்றும், அதனை தடுக்கும் விதமாக இரு மாநில அரசுகளும் கூட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!