சென்னை விமானநிலையத்திற்கு அருகே குண்டு வைக்கப்பட்டுள்ளதாக குடிபோதையில் மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பல்லாவரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குடிபோதையில் போன் செய்த இருவர், விமான நிலையம் எதிரே உள்ள திரிசூல மலையில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் வெடிகுண்டு வைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்லாவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது, கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் பொய்யானது என தெரியவந்துள்ளது.
அழைப்பு வந்த கைப்பேசி எண்ணை வைத்து 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அதில், பல்லாவரம் சந்தைக்கு பொருட்களை விற்க வந்த அவர்கள், மது மற்றும் கஞ்சா போதையில் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, மிரட்டல் விடுத்த முஸ்தபா, பட்டாசு பாலு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்ற மூவரை விடுவித்தனர்.
Loading More post
இனி புதிய ஸ்டைலில் ரேஷன் கட்டிடம்.. தமிழக அரசு வெளியிட்ட மாதிரி வரைபடம்
’பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம்; ஓபிஎஸ்ஸை தாக்க திட்டம் தீட்டி இருந்தனர்’ - புகழேந்தி
சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?
சென்னை கேகே நகரில் மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி
``உதயநிதி, இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுகவை பார்க்கிறோம்”- சி.வி.சண்முகம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி