இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் இரட்டை சதம் அடித்தார். அவர் 239 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்சில் அவர் 112 ரன்களை எட்டிய போது, இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களுக்கு மேல் சேர்த்த 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேத்யூ ஹைடன் தொடர்ந்து 5 ஆண்டுகளில் இவ்வாறு ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார்.
இதுபற்றி ஸ்மித் கூறும்போது, ’நேற்று தேநீர் இடைவேளையின் போது உண்மையிலேயே சோர்வடைந்துவிட்டேன். பேட்டிங் செய்யும்போதும் கொஞ்சம் தடுமாறினேன். வழக்கமாக பேட்டிங் செய்யும்போது நான் அதிகமாக சாப்பிட மாட்டேன். ஆனால், சோர்வு காரணமாக வாழைப்பழம், கொஞ்சம் இனிப்பு சாப்பிட்டப் பிறகு தெம்பானேன். இதையும் பயிற்சியாளர் கெல்லி சொன்னதால்தான் சாப்பிட்டேன். இந்த டெஸ்ட் போட்டியில் ரசித்து ஆடினேன். என்னுடன் ஆடிய மார்ஷும் சிறப்பாக ஆடினார். அவர் நிலைத்து நின்றதால் நானும் நன்றாக ஆடினேன். மைதானத்தில் நிற்கும் போது அதிகமாக எதையும் யோசிப்பதில்லை. ரன் குவிக்க வேண்டும் என்பது மட்டுமே எனக்குள் இருக்கும். அப்படித்தான் நேற்றும் ஆடினேன்’ என்றார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!