ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 623 மீனவர்கள் இதுவரை திரும்பவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒகி புயலின் போது கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தாலும் மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 623 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி 13 பைபர் படகில் சென்ற 35 பேரையும், 54 விசைப்படகில் சென்ற 588 மீனவர்களையும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காணமல் போன மீனவர்களை தேடும் பணியில் விமானப்படை, கப்பல்படை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்