புதுச்சேரியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யச் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கழிவுநீர்க் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளைத் தாங்களே இறங்கிச் சுத்தம் செய்தனர்.
புதுச்சேரியில் கடந்த 4 தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையை சேர்ந்த குழுக்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு மழை நீர் தேங்காதவாறு பார்த்து வருகின்றனர். இருந்த போதிலும் பல்வேறு கழிவுநீர் வாய்க்கால்கள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளான பூமியான்பேட், பாவாணன் நகர், எழில் நகர், பிள்ளைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இங்குள்ள வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படவில்லை என்றும், ரேசனில் அரிசி மற்றும் மண்ணெண்ணை வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தனர். அப்போது மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டடார். மேலும் பிள்ளைத்தோட்டம் பகுதியில் இருந்த கால்வாயை அமைச்சர்களுடன் இணைந்து முதலமைச்சரே சுத்தம் செய்தார்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை