கேரளாவில் கிறிஸ்தவரை மணந்து கொள்ள பெண்ணை அனுமதித்த இஸ்லாமிய குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் யூசுப். இவரது மகள் ஜஷீலா தன்னுடன் பணிபுரியும் கிறிஸ்தவரான டிசோ டாமி என்பவரை காதலித்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜஷீலாவும், டிசோ டாமியும் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து அவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்ட ஜஷீலா குடும்பத்தினர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, ஊர்மக்களை அழைத்துள்ளனர். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜமாத் கமிட்டியினர், அந்தக் குடும்பத்தினரை மற்ற இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன் அந்த குடும்பத்தை ஊரைவிட்டும் ஒதுக்கிவைத்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி