நவோதயா பள்ளிகளை ஆரம்பிக்க மாவட்டம் தோறும் 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என நீதி மன்றம் சில தினம் முன்பு உத்தரவிட்டது.
இந்தப் பள்ளிகள் வந்தால் இந்தி திணிப்பு அதிகரித்துவிடும் ஆகவே தமிழக அரசு அனுமதிக்க கூடாது என கூறி தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல்
கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஒரு புள்ளி விவரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தொடங்க உள்ள நவோதயா பள்ளிகளுக்காக மத்திய அரசு 20 கோடி நிதி உதவி வழங்கும் என்றும் நவோதயாவில் நீட் எழுதிய 14183 பேரில் 11875
பேர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றும் கூறியிருக்கிறார். அதோடு எதிர்க்கட்சிகளை நோக்கி தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 5 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த நிலை ஏன்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்