உக்ரைனில் இருந்து தனது தூதரக அதிகாரிகள் குடும்பத்துடன் உடனே வெளியேற வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது
உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்ய படைகள் எந்நேரமும் ஊடுருவலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. அமெரிக்கா தனது பாதுகாப்பு கூட்டணியான நேட்டோவை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அதில் உக்ரைனையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனது அண்டை நாடான உக்ரைன் அமெரிக்காவின் வலிமையான பாதுகாப்பு கூட்டணியின் ஒரு அங்கமாவதை ரஷ்யா விரும்பவில்லை. உக்ரைனை நேட்டோவில் சேர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் ஒரு புறம் பேச்சுக்கள் நடந்துவந்தாலும் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. எந்நேரமும் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைனிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற உள்ளனர். இதற்கிடையே உக்ரைனில் தனது ஆதரவாளரை கொண்டு பொம்மை அரசு அமைக்க ரஷ்யா முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றஞ்சாட்டியுள்ளது, ஆனால் இதை ரஷ்யா மறுத்துள்ளது.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?