புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திடீரென ஏற்பட்ட வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேலூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மோகன ஜோதி என்ற 6 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட துயர் நீங்குவதற்குள் அந்தச் சிறுமியின் சகோதரன் பாரதி, தந்தை கார்த்திக் உள்ளிட்ட 8 பேருக்கு திடீரென வாந்தி பேதி ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் விராலிமலை அரசு மருத்துவமனையிலும், 5 பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூனனிடம் கேட்டபோது, பொங்கலின்போது உட்கொண்ட உணவால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறினார். சிறுமி மோகன ஜோதிக்கு ஏற்கெனவே நரம்பு பிரச்னை இருந்ததாகவும், அத்துடன் ஒவ்வாமையும் சேர்ந்து கொண்டதால் அவர் இறந்துவிட்டதாகவும் அர்ஜூனன் விளக்கமளித்தார்.
விராலிமலை அருகே இயங்கிவரும் உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை கழிவுகள் அருகிலேயே கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்று ஊர் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!