காஞ்சிபுரம் அருகே கட்டுமான பணியின் போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமது பேட்டை பகுதியில் அமைந்துள்ளது புதுநகர் அவின்யூ பகுதியில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர், புதிய 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சுமித் (47) என்பவர் மூன்றாவது மாடி அருகே எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மாடியிலிருந்து தவறி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 அவசர உதவிக்கு தெரிவித்த நிலையில், அங்கு வந்து அவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே சுமித் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலுசெட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்