கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால் பலரும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் முகத்தை மட்டுமே படமாக பிடித்து அதை அரிசி பைகளின் மீது வைத்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து வருகின்றனர் புதிதாக பெற்றோர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தம்பதியர்.
கொரோனா காரணமாக இந்த ஏற்பாடு என அவர்கள் சொல்லி உள்ளனர்.
இது ஜப்பானில் ‘தகிகோகோச்சி’ (Dakigokochi) என்ற பெயரில் பிரபலமடைந்து வருகிறது. இந்த அரிசி பையை பார்ப்பதற்கு ஒரு குழந்தை தனது அம்மாவின் சேலையை கொண்டு தலை தவிர உடல் முழுவதும் போர்த்தப்பட்டுள்ளதை போல உள்ளது. மேலும் இதன் மூலம் சக குடும்பத்தினர் சமூக இடைவெளியுடன் குழந்தையை ஆரத் தழுவி கொஞ்சவும் முடியும் என்கின்றனர் ஜப்பானியர்கள்.
குழந்தையின் உடல் எடைக்கு ஏற்ப இந்த பைகளில் அரிசி நிரப்பப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகிகோகோச்சி பயணம் தொடங்கி அனைத்தையும் குறைப்பதோடு குழந்தையை நேரில் பார்த்த சுகத்தை கொடுப்பதாக சொல்கின்றனர் அவர்கள்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!