“ஜகமே தந்திரம் படத்தில் எனது கதாபாத்திரத்தை ரசித்தீர்கள் என்று நம்புகிறேன். மேலும், அதிக தமிழ் படங்களில் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
கடந்த 18 ஆம் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பாராட்டுக்களை குவித்து வருவது என்னவோ ஈழத்தமிழராக அட்டிலா கதாபாத்திரத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சிவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜின் நடிப்பும்தான்.
புலம்பெயர்ந்த அகதியாக உருக்கமான நடிப்பில் கவனம் ஈர்த்தார் ஐஸ்வர்யா லட்சுமி. தன்னுடைய வாழ்க்கை பின்னணியை தனுஷிடம் அவர் கோபத்துடன், உருக்கத்துடன் பேசும் காட்சிகள் அனைவரையும் கலங்க வைத்தது. அத்துனை சிறப்பான நடிப்பு.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஜகமே தந்திரம் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி, நீங்கள் அனைவரும் படத்தையும் எனது கதாபாத்திரத்தையும் மிகவும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் நிச்சயம் மேலும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கும் தனுஷ் சாருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!