2014 இங்கிலாந்து தொடரின்போது, தான் மன அழுத்தத்தில் இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸ் உடன் விராட் கோலி "Not Just Cricket" என்ற நிகழ்ச்சியில் உரையாடினார். அப்போது 2014 இங்கிலாந்து தொடரின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்தத் தொடரில் விராட் கோலிக்கு மிகவும் மோசமாக அமைந்ததால் அவரிடம் முக்கியமான ஒரு கேள்வியை முன்வைத்தார் மார்க் நிக்கோலஸ். அது "2014 இங்கிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை அப்போது மன அழுத்தம் ஏற்பட்டதா?" என கேட்டார்.
அதற்கு பதிலளித்த விராட் கோலி "ஆம். எனக்கு மன அழுத்தம் இருந்தது. இதில் இருந்து எப்படி மீள்வது என புரியவில்லை. சில விஷயங்களில் இருந்து எப்படி கடந்து வருவது என்று சுத்தமாக தெரியவில்லை. இந்த உலகத்திலேயே தனித்து விடப்பட்ட நபர் போன்று அப்போது உணர்ந்தேன். நீங்கள் சரியாக ரன் சேர்க்காதபோது காலையில் எழுந்திருப்பதே ஒரு குற்ற உணர்வை தரும். சில கட்டங்களில் நீங்கள் எதையும் கட்டுப்படுத்த முடியாது என்று அனைத்து பேட்ஸ்மேன்களும் உணர்ந்ததாக நான் நினைக்கிறேன்" என்றார்.
மேலுமே பேசிய அவர் "ஒரு நபரின் வாழ்க்கையை மன அழுத்தம் அழித்துவிடும். பல கிரிக்கெட் வீரர்கள் மனநல பிரச்சினைகளுடன் பலரும் நீண்ட காலமாக போராடுகின்றனர். சில நேரங்களில் மாதக்கணக்கில், ஒரு ஆண்டு முழுக்க கூட இது தொடருகிறது. இதில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். இதிலிருந்து மீள்வதற்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து மீளலாம்" என்றார் விராட் கோலி.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?