தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில், உழவர் தலைவர் நாராயணசாமியின் பிறந்தநாள் கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர்கு.செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "விவசாயிகள் பயனடையும் வகையில், ரூ.12510 கோடி கடனை தமிழக முதல்வர் தள்ளுபடி செய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி. அதேசமயம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து உத்தரவிடுவதோடு, அவர்கள் மீண்டும் தொழில் செய்யும் வகையில் ரூ.ஒரு லட்சம் வட்டியில்லாத கடன் வழங்க உத்தரவிட வேண்டும்.
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு ஒட்டு மொத்த விவசாயிகளை கேவலப்படுத்தி வருகிறது. தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ளோம்" என்றார்.
Loading More post
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்