கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்களில் மீண்டும் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுக்களை குவித்தது. சிங்கிள் மதராக இருக்கும் த்ரிஷாவை அஜித் அதே அன்போடு ஏற்றுக்கொள்வதும், அவர் இறந்த பின்பு அவரது மகளை தனது மகளாக வளர்ப்பதும் சினிமா விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. சத்யதேவ் என்ற கேரக்டரில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடிப்பில் மிரட்டியிருப்பார். இப்போதும், ‘மழை வரப்போகுதே’, ‘ அதாரு அதாரு’ பாடல்கள் பலரின் காலர் டியூன்களாக ஒலித்துகொண்டிருக்கின்றன.
கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கொரோனா அச்சத்தால் மக்களின் வருகை குறைந்துள்ளதால், பழைய படங்களை மீண்டும் வெளியிட்டு வருகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
சமீபத்தில்தான், ’புதுப்பேட்டை’, ’ஆயிரத்தில் ஒருவன்’ மீண்டும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், என்னை அறிந்தால் படம் மீண்டும் வரும் ஜனவரி 8 ஆம் தேதிமுதல் தமிழகத்தில் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் வெளியாகவிருக்கிறது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?