ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவியை கொன்றுவிட்டு, சடலத்திற்கு அருகில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் பிஜேஸ் காலணிப் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் சிங் (35). இவரது மனைவி சிவ் கன்வர் (30). விக்ரம் வேலைக்குச் செல்லாத நிலையில் அவரது மனைவி வேலைக்குச் சென்று வீட்டைக் கவனித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று கன்வர் வீட்டிலிருந்து பணியாற்றிய நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த விக்ரம் அவரது மனைவியை இரண்டு கத்திரிக்கோல்களைப் பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்ற போது, விக்ரம் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போன்று தனது செல்போனில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அவரது மனைவி அறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று அவர்கள் வீட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. விக்ரமை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
Loading More post
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வைரல் புகைப்படம்: ராகுல் காந்தியிடம் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி