திருமயம் அருகே உள்ள செங்கீரையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 60க்கும் மேற்பட்ட குரங்குகளை ஊராட்சி நிர்வாகம் கூண்டு வைத்து பிடித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள செங்கீரை ஊராட்சியில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் குரங்குகள் நடமாட்டத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஒரு குரங்கு சாலையில் நடந்து சென்ற பெண்மணி கடித்துவிட்டது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரிமளம் பசுமை மீட்பு குழுவினரிடம் கூண்டுகளை வாங்கி அதில் பழங்களை போட்டு வைத்தனர்.
அந்த பழங்களை சாப்பிட வந்த 60க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டுக்குள் அடைத்து பிடிக்கப்பட்டது. பின்பு இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் வனத்துறையினரின் அனுமதியுடன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் காப்பு காட்டில் அனைத்து குரங்குகளும் விடப்பட்டது.
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்
Loading More post
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
‘சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடக்கிறார்’ - விக்டோரியா மருத்துமனை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!