உலகின் மிக உயரமான சிறுவன் இந்தியாவில் தான் இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சிறுவன் கரண். வயது 8. ஆனால் சிறுவனின் உயரமோ 6 அடி 6 இஞ்ச். சாதாரணமாக 8 வயதில் ஆண் குழந்தைகளின் உயரம் கிட்டத்தட்ட சராசரியாக 120 முதல் 130 செ.மீ வரை தான் இருக்கும். ஆனால் 6 அடி 6 இன்ச் உயரம் இருக்கும் சிறுவன் கரண் உலகிலேயே மிக உயரமான சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிறக்கும்போதே கரண் உயரமாகத் தான் இருந்திருக்கிறார். பிறந்த சமயத்தில் கரண் இருந்த எடை 7.8 கிலோ. மற்றும் 63 செ.மீ உயரம். உலகிலேயே அதிக எடை மற்றும் உயரம் கொண்ட குழந்தை என்ற பெருமை கின்னஸ் புத்தகத்தில் கரணுக்கு பிறந்த உடனேயே கிடைத்தது.
3 வயது இருக்கும் போதே 10 வயது குழந்தைகள் அணியும் உடையை தான் அணிந்திருக்கிறார் கரண். ஆனால் இந்த அசாதாரணமான உயரத்தைக் கண்டு எந்தவித சங்கடத்திற்கும் ஆளாகாமல் கூடைப்பந்து விளையாட்டு வீரராக வர வேண்டும் அல்லது டாக்டராக வேண்டும் என்பதே கரணின் கனவாக உள்ளது.
கரணின் அப்பா 6 அடி 7 இன்ச் உயரம் கொண்டவர். கரணின் அம்மா ஸ்வேத்லானாவின் உயரம் 7 அடி 2 இன்ச். ஸ்வேத்லானா இந்தியாவின் உயரமான பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை”-ஐஐடி மாணவி புகார்
ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'
மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
கையில் வாள்... குதிரை சவாரி... டிராக்டர் பேரணிக்கு காவலாக வந்த 'நிஹாங்' சீக்கியர்கள் யார்?
4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி