கிரெடிட் கார்டுகளுக்கும் மாதாந்திர தவணை கட்ட வேண்டாம் என ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களின் பாரத்தை குறைக்கும் வகையில் கடனுக்கான மாதாந்திர தவணைகளுக்கான சலுகைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி நிறுவன வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள், கிராமப்புற வங்கிகள், அனைத்திந்திய நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட அனைத்துமே கடன் பெற்றவர்களிடம் மார்ச் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரைக்கான மாதத் தவணை வசூலிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.
இந்த மாதாந்திர தவணை விலக்கு கிரெட்டி கார்டுகளுக்கு பொருந்துமா ? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கும் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அசல் மற்றும் வட்டியுடன் கூடிய கடன், ஒரே தவணையாக செலுத்தும் புல்லட் கடன், மாதாந்திர தவணை மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான தவணை இவை அனைத்துக்கும் ஆர்.பி.ஐ உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!