சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1900 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் உள்ள விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆடுகளத்திற்குள் தீடிரென ஓடிவந்த பெண்: கனிவாக நடந்து கொண்ட டி காக், ஸ்டெயின்..!
மேலும், சீனாவில் உள்ள பிற நாட்டு மக்களும் விமானங்கள் மூலமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த 650 பேர் சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா வந்தடைந்தனர். இந்நிலையில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் வுஹான் நகரில் சிக்கித் தவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர்கள் கடந்த சனிக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டனர். வீடியோவில் உள்ள ஆஷிஷ் யாதவ் வுகான் டெக்ஸ்டைல் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி நேகா யாதவ் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
அவர்கள் வீடியோவில் கூறியதாவது, “நாங்கள் பல்கலைக் கழகத்தின் குடியிருப்பில் வசித்து வருகிறோம். இதற்கு முன்னர் இங்கு பல்கலைக் கழக மாணவர்கள் இருந்து வந்தனர். ஆனால் தற்போது இங்கு யாரும் இல்லை. இப்போது எங்களிடம் கொஞ்சம் காய்கறிகளும் தண்ணீர் கேன்கள் மட்டுமே உள்ளன” என்று கூறியிருந்தனர்.
This video is from Wuhan, China’s #coronavirus epicentre . It was shot on Sunday by Ashish Yadav , as associate professor at the Wuhan Textile University . Ashish and his P.hd scholar wife Neha are stuck in Wuhan, under lockdown . They have requested @EOIBeijing for help pic.twitter.com/7SwdzzqzdB— Alok Pandey (@alok_pandey) February 17, 2020
ஹர்பஜன் சிங்கிற்கு நண்பன் ஆகிறார் அர்ஜூன்? - ‘பிரண்ட்ஷிப்’ பட அப்டேட்
இதனையடுத்து, இந்தத் தம்பதி ஞாயிற்றுக்கிழமை மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், “வானிலை மிக மோசமாக உள்ளது. நேற்றிலிருந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததற்கு பின்னர் எங்களுக்குத் தேவையான காய்கறிகளையும், தண்ணீரையும் அனுப்பி வைத்தனர். ஆனால், இவையும் விரைவில் தீர்ந்து விடும். ஆகவே எங்களை இந்திய அரசு விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து சீனாவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டது. அதில் சீனாவுக்கு உணவுப்பொருட்களை வழங்க இந்திய விமானம் ஒன்று சீனாவுக்கு வர இருக்கிறது. அந்த விமானத்தில் சீனாவில் இருந்து இந்தியா வர விரும்பும் இந்தியர்கள் அதில் வரலாம் என்று குறிப்பிட்டு அவர்களை தொடர்பு கொள்வதற்கான எண்களையும் குறிப்பிட்டுள்ளது.
GoI will send a consignment of medical supplies on a relief flight to Wuhan later this week to support China to fight the COVID-19 epidemic. On its return, the flight will have limited capacity to take on board Indians wishing to return to India from Wuhan/Hubei.(1/3) @MEAIndia— India in China (@EOIBeijing) February 17, 2020
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்