தர்பார் படத்தில் சசிகலா தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கத் தயார் என லைகா பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாகவும், சுனில் ஷெட்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 7ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ரஜினிகாந்த் மும்பை காவல் ஆணையராக நடித்துள்ளார். பணமிருந்தால் சிறைக்கைதிகூட ஷாப்பிங் போகலாம், சவுத்தில் கூட சிறைக்கைதி ஒருவர் வெளியில் சென்று வருவதாக தெரிகிறது என்ற வசனம் தர்பார் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இது மறைமுகமாக சசிகலாவை குறிப்பிடுவதாக கூறப்பட்டது.
இதையடுத்து சசிகலா குறித்த காட்சியை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாரையும் புண்படுத்தும் வகையில் அந்த வசனங்கள் வைக்கப்பட்டவில்ல எனவும் யாரையேனும் புண்படுத்தும் படி இருந்தால் அந்த காட்சியை நீக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!