முதுகுவலி என்று மருத்துவமனை சென்ற பெண்ணின் உடலில் இருந்து துப்பாக்கிக் குண்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த 2 வருடங்களாக கடுமையான முதுகுவலி இருந்துள்ளது. இதனையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்துள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் உடலில் இருந்து துப்பாக்கிக் குண்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இரண்டு வருடங்களாக உடலில் துப்பாக்கிக்குண்டுடனே அப்பெண் இருந்து வந்துள்ளார். முதுகுவலி அதிகரிக்கவே வேறு வழியின்றி மருத்துவரை அணுகியுள்ளார். ஏன் அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது, அதனை வெளியே சொல்லாமல் அப்பெண் ஏன் மறைத்துவந்தார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு உரிய பதில் வேண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை