நாகையில் கரை ஒதுங்கிய இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்கள் கள்ளத்தோணியில் வந்தார்களா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
படகு பழுது காரணமாக இலங்கை மீனவர்கள் 3 பேர் நாகை காமேஸ்வரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளனர். இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் சோர்வுடன் காணப்பட்ட கடல்கஜன், ஸ்ரீமுருகன், விஜேந்திரன் ஆகிய இந்த மீனவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதையடுத்து மூன்று பேரிடமும் கீழையூர் கடலோர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் ஸ்ரீமுருகன் பாஸ்போர்ட் மோசடி, கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தவர். இவரை மீட்டு அழைத்துச்செல்ல கள்ளத்தோணியில் வந்தார்களா? கடத்தல் தொடர்பாக வந்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?