அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மருத்துவர் அச்சுதா தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். கன்சாஸில் உள்ள கிழக்கு விசிடா பகுதியில் உளவியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சொந்தமான கிளினிக் ஒன்றினை நடத்தி வந்துள்ளார். அச்சுதா கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவரது கிளினிக்கில் கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அச்சுதாவின் நோயாளிகளில் ஒருவரும் அமெரிக்க வாழ் இந்திய இளைஞருமான உமர் ரஷித் தத் என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். நோயாளிக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாகவும், முடிவில் கத்தியால் குத்தப்பட்டதாகவும் அமெரிக்க போலீசார் தெரிவித்தனர்.
உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவராக அச்சுதா 1989 ஆம் ஆண்டு முதல் கன்சாஸில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். உளவியல் மட்டுமல்லாமல் யோகா மூலமும் சிகிச்சை அளித்து வந்தார். அச்சுதாவின் மனைவியும் ஒரு மருத்துவர் தான். இந்தியாவை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். முன்னதாக தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குசிபோட்லா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்டார்.
Loading More post
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்
கொரோனா 2-ம் அலை எதிரொலி: பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!
ஐபிஎல் 2021: டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி