தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் பணிகள் எப்போது முடியும் என விமான நிலைய இயக்குநர் தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன் கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. இதன் பின்னர் இரவு நேர விமான சேவை தொடங்கும் என்றார்.
விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்காக தமிழக அரசிடமிருந்து நிலம் பெறப்பட்டுள்ளது. விரிவாக்கத்திற்கு விமான நிலைய ஆணைய தலைவரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி விரைவில் கிடைக்கும். அதன் பின்னர் விரிவாக்க பணி தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் முழுப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின் ஒரே சமயத்தில் 300 பயணிகள் வரவும், செல்லவும் ஏற்றபடி விமானங்கள் இயக்கப்படும் என்றார்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !