அதிமுகவிற்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என புரியவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர்கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு பரப்புரை சூடுபிடித்துள்ளது.
வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஏ.சி.சண்முகம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவிற்கு பணியாற்றிவர். அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். கருணாநிதி ஆட்சியில் காவிரி தண்ணீரை பெற்றுத்தர முடியவில்லை. ஸ்டாலின் பல சூழ்ச்சிகள் செய்தாலும் அவரால் முதல்வராக முடியாது. அதிமுக ஆட்சியில் அடிமட்ட தொண்டன் முதல்வராக முடியும். திமுகவில் அது முடியுமா? மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் அதிமுக அரசு அனுமதிக்காது. இருந்தாலும் அதிமுகவிற்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என புரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்
“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி
28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!