கொரோனா வைரஸ் சீன பரிசோதனை கூடத்தில் இருந்து கசியவில்லை என்றும், வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு மூலம் பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. வுகானில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக ஒரு தரப்பினரும், சீனாவில் பரிசோதனைக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கிய போது கசிந்ததாக மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர். இதனையடுத்து கொரோனா பரவல் குறித்து கண்டறிய உலக சுகாதார நிறுவனம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவினர் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து உணவுச் சந்தை, ஆய்வுக்கூடம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பிறகு அவர்கள் அளித்துள்ள அறிக்கையில், கொரோனா வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் வவ்வாலில் இருந்து நேரடியாக மனிதர்களுக்கு பரவியிருக்க சாத்தியம் உள்ளது என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குளிரூட்டப்பட்ட உணவு மூலம் பரவியிருக்காது என்றும், பரிசோதனை கூடத்தில் இருந்து கசிய வாய்ப்பே இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?