நாட்டு மக்களுடன் கடந்த 2014 முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலமாக பிரதமர் மோடி பேசுவது வழக்கம். அந்த வகையில் மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர் மோடி, கோவையை சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகநாதனை பாராட்டியுள்ளார். ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரக்கன்றுகளை நடுவதற்காக ஒதுக்கி, பயன்படுத்தி வருகிறார் மாரிமுத்து யோகநாதன். அவரது மரக்கன்று நடும் பணியைத்தான் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
யார் அந்த மாரித்து யோகநாதன்?
கோவையை சேர்ந்த யோகநாதன் அரசு பேருந்து நடத்துநராக உள்ளார். யோகநாதனுக்கு சிறுவயது முதலே இயற்கையின் மீதும் மரங்களின் மீதும் தீராக்காதல். அதன் காரணமாக, தன் பணிக்கு நிகரான நேரத்தையும், ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரக்கன்றுகளை நடுவதற்காக ஒதுக்கி, பயன்படுத்தி வருகிறார். கடந்த 33 வருடங்களாக மரக்கன்றுகளை நடுவதில் அதித ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் மரம் வளர்ப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியும் அளித்து வருகிறார்.
சுற்றுச்சூழல் மீதான அக்கறையும், ஆர்வமும் யோகநாதனுக்கு மத்திய அரசின் பசுமைப்போராளி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் சேவை வீரர் ஆகிய விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இவரது ஆர்வத்தைக் கண்ட அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான வாசுதேவன் என்பவர், தனது சொந்த செலவில் கோவை ஆலந்துறையில் 2 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தில் 'மரம் சூழலியல் நடுவம்' என்ற அமைப்பை நிறுவியுள்ள யோகநாதன், ஆர்வத்துடன் வருபவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். அழிவின் விளிம்பில் உள்ள மரங்களின் விதைகளை மீட்டு, மரக்கன்றுகளை வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று கூறி வருகிறார் அவர்.
இதுவரை 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் யோகநாதன், எட்டாயிரம் பள்ளிகளுக்குச் சென்று மாணவ,மாணவிகள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். சிறுவர், சிறுமிகளுக்கு மரக்கன்றுகளை பதியம் போடுவது, மாடித்தோட்டம் உள்ளிட்ட பயிற்சிகளையும் அளித்து வருகிறார் யோகநாதன். மரங்கள் வளர்த்து வருவதோடு மட்டுமின்றி, ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச மரக்கன்றுகளும், பயிற்சியும் வழங்கி வரும் யோகநாதன், சிபிஎஸ்இ-யின் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix