80 வயதுக்கு மேலான முதியோருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் விருப்பப்பட்டால் தபாலில் வாக்களிக்கலாம் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என திமுக தரப்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் திமுக தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ‘இதேபோன்று டிசம்பர் 3 இயக்கத்தின் தீபக் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். அதேபோல் இந்த வழக்கையும் அதே தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் திமுகவின் வழக்கை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இதனால் தீபக்கின் வழக்கும், திமுகவின் வழக்கும் ஒரே அமர்வில் ஜனவரி 7ஆம் தேதி பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai