சவுதியில் மிகவும் பிரபலமானது மெக்கா மசூதி. வெள்ளிக்கிழமை இரவு காரில் அதிவேகத்தில் வந்த சவுதி நபர் ஒருவர் மெக்கா வாயிலில் மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் வந்த அந்த கார் தடுப்புக்களைக் கடந்து தெற்கு வாயிலின்மீது மோதி நின்றதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் காருக்குள் இருந்த நபர் சுயநினைவின்றி இருந்ததாகவும், அவரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அவரை வழக்கறிஞர்கள் முன்பு ஆஜர்படுத்தி, குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. சேதமடைந்த அந்த நபரின் காரை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தும் வீடியோக் காட்சி ஒன்றை செய்தி நிறுவனம் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
இந்த கிராண்ட் மசூதியில் உள்ள காபாவில் ஒருநாளைக்கு ஐந்துமுறை பிரார்த்தனை நடக்கிறது. கொரோனா ஊரடங்கால் நீண்டநாட்கள் பூட்டப்பட்டிருந்த இந்த மசூதி சமீபத்தில்தான் திறக்கப்பட்டது. க்யூரான் டிவி வெளியிட்ட விபத்து வீடியோவில் விபத்திற்கு முன்னும், அதற்கு பிறகும் காபாவில் மக்கள் கூடியிருப்பதைப் பார்க்கமுடிகிறது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide