கோவையில் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் பிரியாணி உணவகத்தை சங்கீதா என்ற திருநங்கை அண்மையில் தொடங்கியிருந்த நிலையில், வீட்டில் அவர் திடீரென சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கோவை சாயிபாபா காலனி பகுதியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா. இவர் திருநங்ககைகள் நல்வாழ்விற்காக தொடர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைகளால் இயங்கும் பிரியாணி விற்பனை உணவகத்தை அவர் ஆரம்பித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவரது தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால், உடன் இருந்த திருநங்கைகள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது உடலில் வெட்டுக் காயங்களுடன் தண்ணீர் டிரம்பில் உடல் அடைக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சாயிபாபா காலனி காவல்நிலையத்தில் இருந்து சில அடி தூரத்திலேயே சங்கீதா வசித்த வீடு அமைந்துள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தகவலறிந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Loading More post
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு - காங்கிரஸ் தலைமை உத்தரவு
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!