\
திருடர்களை பிடித்த போலிசார்
திருடர்களை பிடித்த போலிசார்PT

கொள்ளையர்களை பிடிக்கும்போது தமிழக போலீசாரை தாக்க முயன்ற மக்கள்; தீரன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!

ஆவடியில் நகைக்கடை கொள்ளை - மர்ம கும்பலை கைது செய்த காவல்துறை
Published on

சென்னை ஆவடியில் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தீரன் பட பாணியில் கைது செய்த தமிழ்நாடு போலிசார்.

குஜராத், ராஜஸ்தானிலும் கைவரிசை காட்சிய கும்பலை 12 நாட்கள் முகாமிட்டு பிடித்த தமிழக காவல்துறை. கொள்ளையர்களை கைது செய்ய முயன்ற காவலர்களை உள்ளூர் நபர்கள் தாக்க முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் கைது செய்தவர்களை சென்னை அழைத்து வந்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர். கைதான இருவரிடம் இருந்து 703 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி, 2 ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com