கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 1 வயதுக் குழந்தை ஆசாம் தனது தாய் மண்ணைத் தொடாமலேயே இறந்தது, அக்குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோழிக்கோடு வெல்லிமடு குன்னூவைச் சேர்ந்த நிஜாஸ் துபாயில் வசிக்கிறார். அங்கேயே, இவரது மனைவி சாஹிராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்வது ஆபத்து என்பதால், கடந்த ஒரு வருடமாக பயணத்தை தவிர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா சூழலாலும் பேரக்குழந்தையை பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தாலும் குழந்தை ஆசாம் முகமதுவை பார்க்கவேண்டும் என்று ஆசையோடு அழைத்துள்ளனர், நிஜாஸின் பெற்றோர். ஆனால், குழந்தை ஆசாமின் முதல் விமானப் பயணமே இறுதிப் பயணமாகியுள்ளது.
மேலும், இந்த விபத்தில் குழந்தையின் தாய் 29 வயதான சாஹிரா பானுவும் இறந்தார். அவர் இறக்கும்போது குழந்தை மடியில் இருந்தது. கடந்த 10 வருடமாக துபாயில் வசித்துவரும் நிஜாஸ் – சாஹிரா தம்பதிகளுக்கு 8 வயதில் இஹான் முகமதுவும், 4 வயதில் மரியம் முஹமது என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களும் விமான விபத்தில் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாஹிரா விபத்துக்குப்பிறகு கொண்டோட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்