கொடைக்கானலில் பேரிக்காய். அதிக அளவில் கொத்துக் கொத்தாக காய்த்துள்ளது. வாங்க ஆள் இல்லாததால் பறிக்காமல் மரத்திலேயே விவசாயிகள் விட்டுவிடுகின்றனர்.
கொடைக்கானல் பள்ளங்கி அட்டுவம்பட்டி வில்பட்டி செம்பகனூர் போன்ற பகுதிகளில் காய்க்கக்கூடிய பேரிக்காய் அதிகமான மருத்துவ குணங்களைக் கொண்டது. ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிக அளவில் காய்க்கும் பேரிக்காய், கேரளா கர்நாடகா மாநிலம் மற்றும் சென்னையில் உள்ள கோயம்மேடு மார்க்கெட் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் அதிக வியாபாரிகள் கூடும் கோயம்மேடு மார்க்கெட்டும் மூடப்பட்டுள்ளது. அதேபோல கொடைக்கானலுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிக்காய் காய்ப்பு அதிகமாக இருந்தாலும் வியாபாரம் இல்லை என்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கக் கூடிய அளவுக்கு வருமானம் இல்லாமல் இருப்பதால் காய்களை பறிக்காமல் மரத்தில் அப்படியே விட்டுவிடுகிறோம் என்று கூறிய கொடைக்கானல் வில்பட்டியை சேர்ந்த விவசாயி தினகரன் தொடர்ந்து பேசினார்.
பேரிக்காய் சீசன் காலத்துல கிலோ எழுபது ரூபாயில் இருந்து என்பது ரூபாய் வரை போகும். அதேபோல சுற்றுலா வரும் பயணிகளுக்கு நூற்றியிருபது நூற்றி ஐம்பது என்று விற்பனை செய்வோம். அதனால் நல்ல வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தைக் கொண்டு வாங்கிய கடனை அடைப்போம். ஆனால் இப்போது கொரோனா முடக்கத்தால் விவசாயமே ஒண்ணுமில்லாம போய்விட்டது. போட்ட முதலை எடுப்பதே கஷ்டமாக இருக்கிறது. விளைச்சல் அதிகமாக இருந்தாலும் கட்டாத விலைக்கு விற்கிறது. கிலோ பத்து பதினைந்துக்கு போட்டால் எப்படி கட்டுபடியாகும். காய் பறிக்கிற கூலி கூட கையை பிடிக்கிறது.
ஏற்கெனவே சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கிற கொடைக்கானல் மக்களோட வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கிறது. இதுல விவசாயமும் இப்படியே போனால் எங்கபாடு ரொம்ப திண்டாட்டம்தான். இப்ப அடிக்கிற ஆடிகாத்துல மரத்துல இருக்குற காயும் கொட்டிவிடுகிறது. அதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம்தான் என்றார் விவசாயி தினகரன்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide