குருகிராம் பகுதியில் நுழைய அனுமதிக்க மறுத்த போலீஸார் மீது மக்கள் கல்வீசித் தாக்கினர்.
டெல்லியில் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் குருகிராம் நகரத்தில் பணிபுரிந்து வந்தனர். கொரோனா பொது முடக்கத்தால் தொழிற்சாலை மூடப்பட்டதால், இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த கிராமத்திற்குத் திரும்பினர். இதனால் வேலையின்றி அவர்கள் இருந்தனர். இந்நிலையில் பொது முடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி, இன்று முதல் குருகிராமில் தொழிற்சாலை இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் டெல்லி எல்லையைச் சேர்ந்த மக்கள் நடைப்பயணமாக மீண்டும் குருகிராமில் உள்ள தொழிற்சாலைக்குச் சென்றனர். ஆனால் எல்லையிலிருந்த போலீஸார், அவர்களை குருகிராமிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர். இதையடுத்து போலீஸார் தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். இதற்கிடையே டெல்லி மற்றும் ஹரியானா இடையேயான எல்லைப்பகுதிகள் மூடப்பட்டன.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்