நுகரும் தன்மையை இழத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் கொரோனா நோய் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காய்ச்சல் மற்றும் வரட்டு இருமலே கொரோனா நோய்த் தொற்றின் ஆரம்ப கட்ட அறிகுறிகளாக கருதப்பட்டது. இதற்கு காரணம் கொரோனா வைரஸ் சுவாசக் குழாயின் மூலமே மனித உடலில் நுழைகிறது. இதனால் காய்ச்சல், வரட்டு இருமல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்படி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது !
தற்போது திடீரென நுகரும் தன்மையையோ சுவையை அறியும் ஆற்றலையோ இழப்பதும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதே நேரம் வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளும் தெரியலாம் என கூறப்படுகிறது. சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா நிதி : பாதி சம்பளத்தை கொடுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்
எனினும் இவையெல்லாம் பாதிப்பு ஏற்பட்ட சிறிது நாட்களுக்கு பின்னரே தெரியத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் வெகு சிலரே வயிற்றுப்போக்கை ஒரு அறிகுறியாக தெரிவித்துள்ளாதாகவும், நுகரும் தன்மையையும் சுவையை அறியும் ஆற்றலையும் யாரும் இழந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் தெரிந்தால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதோ பரிசோதனை செய்து கொள்வதோ நல்லது என மருத்துவர்கள் கூறூகின்றனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!