Published : 22,Mar 2020 11:50 AM

தன்னலமின்றி பணியாற்றுபவர்களை கைதட்டி பாராட்டிய பொதுமக்கள் !

Streets-in-India-go-eerily-quiet-during-self-imposed-curfew-to-fight-coronavirus

 

தன்னலம் கருதாமால் உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களை கெளரவிக்கும் வகையில், அரசியல் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கைத்தட்டி பாராட்டி வருகின்றனர்.

image

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 7 ஆவது நபர் கொரோனாவால் உயிரிழப்பு

image

இந்த சுய ஊரடங்கு இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மருத்துவமனைகளில் தன்னலம் கருதாமல் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாட்டின் பலப்பகுதிகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கைத்தட்டி வருகின்றனர். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாரயண சாமி, காவலர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் தங்கள் வீட்டின் வெளியே நின்று கைதட்டி பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்