ஆட்டோவில் தவறவிட்ட 74 ஆயிரம் ரூபாய் பணத்தை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தேனியில் விவசாயி ஒருவர் 74 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வைப்புத் தொகை பத்திரத்தை ஆட்டோவில் தவறவிட்டுள்ளார். அந்த ஆவணத்தையும் பணத்தையும் காவல்துறையினரிடம் ஓட்டுநர் நேர்மையாக ஒப்படைத்துள்ளார். உரிய விசாரணை மூலம் அதனை சம்பந்தப்பட்ட நபரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஆண்டிப்பட்டி அருகே அம்மாவாசை என்ற விவசாயி ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 74 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத் தொகை பத்திரத்தை அதிலேயே தவறவிட்டு சென்றுள்ளார்.
முகங்களில் ரத்த தழும்பு... கொரோனாவை ஒழிக்க பணியாற்றும் மருத்துவ ஊழியர்களின் நிலை..!
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அழகர்சாமி என்பவர் விவசாயி தவற விட்ட பணத்தை ஆண்டிப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட விவசாயியை அழைத்து பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!