சபரிமலை கோயிலில் நடை திறந்த முதல் நாளிலேயே, 3 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. கடந்த இரு தினங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நடை திறந்த முதல் நாளிலேயே 3 கோடியே 30 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் வசூலாகி இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வசூல் தொகை இரு மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்த முயன்றதால், பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனால், பக்தர்கள் வருகை குறைந்ததோடு, நடை திறந்த முதல் நாளில் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலானது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை