DREAM -11 செயலி மூலம் நூதன மோசடி: வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக ஆட்சியரிடம் பரபரப்பு புகார்...!

DREAM -11 ஆப் மூலமாக அந்நிறுவனத்தின் ஆட்களை பயன்படுத்தி அதிக பரிசுகளை பெறவைத்து மோசடி நடந்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Kalyana Kumar
Kalyana Kumarpt desk

செய்தியாளர்: மணிகண்டபிரபு

உள்ளூர் போட்டிகள் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், கபடி லீக், புட்பால் லீக் வரை அனைத்துவகை போட்டிகளின் போதும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு மொபைல் செயலிகள் அறிமுகப்படுத்துகின்றன. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை குறிவைத்து, தனியாக சில செயலிகள் மூலமாக பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் நபர்களுக்கு அதிக பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

Dream 11
Dream 11pt desk

மொபைல் ஆஃப்கள் மூலம் நூதன மோசடி:

இதில் விளையாடத் தொடங்கும்போதே ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகின்றன. இந்த செயலிகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும் விளம்பரம் செய்து வருகின்றனர். அதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் அச்செயலிகளில் விளையாடி வருகின்றனர்.

அப்படியான ஒரு செயலிதான் ட்ரீம் 11. இச்செயலியில் மொத்த போட்டியாளர்கள், குழு போட்டியாளர்கள், தனித் தனி போட்டியாளர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அதற்கேற்ப அவர்கள் பணம் கட்ட வேண்டியிருக்கும்.

Kalyana Kumar
IPL ஒளிபரப்பு விவகாரம் | நடிகை தமன்னாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்..

செயலியில் நுழையும் ஒவ்வொரு பயனாளியும் தங்களுக்குப் பிடித்த 11 வீரர்களை தேர்வு செய்து பணம் கட்டவேண்டும். குறிப்பாக அப்படி அன்றைய ஐபில் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் மீது பணம் கட்டவேண்டும். அப்படி அவர்கள் பணம்கட்டி தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் எடுக்கும் ஒவ்வொரு ரன், கேட்ச், விக்கெட் போன்றவற்றுக்கு அதற்கேற்ப இவர்களுக்கு ஸ்கோர் வழங்கப்படும். அதனடிப்படையில் போட்டி முடிவடைந்த பின்னர் மொபைல் செயலி மூலமாகவே வெற்றியாளர்கள் பட்டியல் வெளியாகும். இதில், நாடு முழுவதும் பல கோடிக்கணக்கானோர் 20 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்தி விளையாடி வருகின்றனர்.

kalyana Kumar
kalyana Kumarpt desk

DREAM -11 பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார்:

பல செயலிகள் இந்த ஃபார்முலாவை கொண்டிருந்தாலும், அவற்றில் பிரபலமானது மொபைல் செயலியான DREAM -11. இந்நிலையில் இந்த செயலி, பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

அதன்படி விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்த கல்யாணகுமார் என்பவர், தமிழக காவல்துறையிடம் “DREAM -11 செயலியில் ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் முறைகேடாக சொந்த நிறுவனத்தில் பணியாற்றும் 200 போட்டியாளர்களை விளையாடவைத்து தொடர்ந்து மோசடி நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் முதல்பரிசு பெறும் வகையில் நாள்தோறும் பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாயை ஏமாற்றி வருகின்றனர்.

Kalyana Kumar
மணல்குவாரி முறைகேடு | 5 ஆட்சியர்கள் ED விசாரணைக்கு ஆஜர்... சம்பவத்தின் பின்னணி என்ன? முழு விவரம்!

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்:

மேலும் இதுபோன்ற நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்துகிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. இது போன்ற பொதுமக்களை ஏமாற்றும் DREAM -11 நிறுவனத்தில் மோசடி குறித்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் அளிந்திருந்தார். தொடர்ந்து நேற்று மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்திருக்கிறார்.

Document
Documentpt desk

இது குறித்து பேசிய கல்யாண குமார், “DREAM -11 ஆப் மூலமாக பொதுமக்களின் பணத்தை, நிறுவனத்தின் ஆட்களை வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்று வருவதால் இது குறித்து முழுமையான உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com