சென்னை அருகே துப்பாக்கியால் சுடப்பட்ட கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த முகேஷ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று தனது நண்பரான விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார். முகேஷ் மற்றும் விஜய் இருவரும் வீட்டிற்குள் இருந்த நிலையில், விஜய்-யின் அண்ணனான உதயா வெளியே இருந்து கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக விஜய் வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். உதயா உள்ளே சென்று பார்த்தபோது, முகேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரின் நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறது.
உடனடியாக உதயா இதுகுறித்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்க, முகேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி முகேஷ் உயிரிழந்தார்.
இதனையடுத்து, முகேஷ் சுடப்பட்டது குறித்து இருவரை பிடித்து தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விஜய் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?