கர்நாடக மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து கவிழ்ந்ததால், அவர் முதலமைச்சர் பதிவியிலிருந்து விலகினார். இந்நிலையில், 105 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினார். எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்ற ஆளுநர், அவரை இன்று மாலை பதவியேற்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்படி, மாலை 6 மணிக்கு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகைக்கு எடியூரப்பா வருகை தந்தார். கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில், கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா! #Karnataka #Yeddyurappa https://t.co/7LMQVxVjRN— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 26, 2019
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!