ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கார்ஹ்வா பகுதியில் இருந்து சட்டீஸ்கருக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இதில் பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 39 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் இன்னும் விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
ஜூன் 10 ஆம் தேதி ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டம் பாட்னாவிலிருந்து புறப்பட்ட பேருந்து இரும்பு ஏற்று வந்த டிரெய்லர்-டிரக் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்