உள்ளாட்சித் துறை முறைகேடுகளில் தன்னை தொடர்புபடுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதற்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திரும்ப பெற்றார்.
மக்களவைத் தேர்தலுக்காக நடந்த பரப்புரையின் போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் நடந்துள்ள ஊழலில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகவும் ஸ்டாலின் பேசியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆவேசமடைந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்து, நஷ்ட ஈடாக தமக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேணடும் எனக் கோரியிருந்தார். மேலும், தன்னை குற்றஞ்சாட்டி ஸ்டாலின் பேசுவதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தனக்கு எதிராக பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரிய இடைக்கால மனுவை மட்டும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix