உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள லுஹாரி கிராமத்தை சேர்ந்த 10 பேர், குழந்தையின் முடி இறக்கும் நிகழ்ச்சிக்காக, பிரிஜ்ஹாட் பகுதிக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
முடி இறக்கிவிட்டு கங்கை ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது இரண்டு சிறுவர்கள் ஆழமாக பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். இதைக்கண்ட குடும்பத்தினர், அவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் குதித்தனர். இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்பு படையினர் விரைந்து வந்து 5 பேரின் உடல்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்கள், பண்டி (21), சஞ்சீவ் (18), மனோஜ் (20), விபின் (21), மற்றொரு சஞ்சீவ் (17), தர்மேந்திரா (16), கவுதம் (20) என அடையாளம் தெரிய வந்துள்ளது. இதில் கவுதம், தர்மேந்திரா உடல்களை தேடி வருகின்றனர்.
கங்கை ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?