வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் 4 இடங்களில் நாளை அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக தமிழகத்தில் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு நாளைய தினம் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களையும் ஊழியர்கள் விடுப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி நேற்று தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டதால், அங்கு 4 இடங்களில் அரசு பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்படி ஆகிய இடங்களில் நாளை விடுமுறை ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வேலூர் மக்களவைத் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் சிலர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில், பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து வேலூரில் தேர்தலை ரத்து செய்து மாலை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுகுமாறன் என்ற சுயேச்சை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!