நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'பேட்டரி டார்ச்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி, விருப்பமனுக்கள், பரப்புரைகள் என தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்து, தொகுதி பங்கீடையும் நிறைவு செய்யும் தருவாயில் உள்ளன.
அதேசமயம் புதிதாக தேர்தலை சந்திக்கவுள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. அதேசமயம் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அக்கட்சியில் தலைவர் கமல் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 28ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியதற்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பேட்டரி டார்ச் சின்னம் மிகப்பொருத்தமானது . தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும், இந்திய அரசியலுக்கும் பேட்டரி டார்ச் சின்னம் புதிய ஒளி பாய்ச்சும் என்று தெரிவித்துள்ளார்
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்