நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ரோகித் ஷர்மா அரை சதம் அடித்துள்ளார்.
இந்தியா-நியூஸிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான, டிம் செஃபெர்ட் மற்றும் காலின் முன்றோ ஆகியோர் தலா 12 பந்துகளுக்கு 12 ரன்களை எடுத்து வெளியேறினர்.
இதையடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 20 (17) மற்றும் டெரில் மிட்செல் 1 (2) ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி, 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மற்றொருபுறம் நிதானமாக விளையாடிய ராஸ் டைலர் 42 (36) ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் குணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடி கேப்டன் ரோகித் ஷர்மா அரை சதம் எடுத்தார். பின்னர் சுழற்சி பந்துவீச்சாளர் சோதி வீசிய பந்தில் ரோகித் கேட்ச் அவுட் ஆனார். தற்போது தவான் மற்றும் ஷிகர் தவான் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 80 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!